Monday 3 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 210 - மோசடியாக பணம் பெற்றதாக மற்றவர் மீது பொய் வழக்கு தொடுத்தல்






       ஒருவர் நமக்கு எந்த விதமான தொகையும் தரவேண்டியது இல்லை ,  ஆனால் அந்த நிலையில் மோசடியாக அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

     மேலும் ஒருவர் நமக்கு கடன் பட்டிருக்கும் தொகையை விட அதிகமாக தர வேண்டும் என மோசடியாக அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  மேலும், நமக்கு எவ்விதமான உரிமையும் இல்லாத ஒரு சொத்துக்காக அப்படி வழக்குத் தொடர்வதும்,  அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

   ஒரு நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கை எடுத்து அடைய வேண்டியவற்றை அடைந்த பிறகு, மீண்டும் அந்த ஆணையைப் பின் பற்றி நடவடிக்கை எடுப்பதும், பிறரை அந்த ஆணையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கும் படி அனுமதிப்பதும் குற்றமாகும்.
  
  இதுப்போன்ற செயல்கள், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படுபவைகள். ஆகவே இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 



Section 210:- Fraudulently obtaining decree for sum not due

Whoever fraudulently obtains a decree or order against any person for a sum not due, or for a larger sum than is due or for any property or interest in property to which he is not entitled, or fraudulently causes a decree or order to be executed against any person after it has been satisfied or for anything in respect of which it has been satisfied, or fraudulently suffers or permits any such act to be done in his name, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

No comments:

Post a Comment