Tuesday 15 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 417 - வஞ்சித்தலும் அதன் தண்டனையும்.

வஞ்சித்தல் என்றால் என்ன...............................@?

உதாரணம் 1 - ஒருவரிடம் ஒரு ஒப்பந்தம் செய்ந்து கொண்டபடி நாம் நடக்காமல், அவரிடம் நாம் அந்த ஒப்பந்தப்படி நடந்து விட்டதாக நம்ப வைத்துக் கருத்துடன் ஏமாற்றி அவரிடமிருந்து அநியாயமாக பணம் பறிப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.


உதாரணம் 2 - ஒரு சொத்தின் மீது நமக்கு எந்த விதமான உரிமையும் இல்லை ஆனால் அது நமது சொத்து என்று பிறரை நம்ப வைத்து விற்று விடுகிறோம். அவ்வாறு அவரிடம் தமது சொத்து என நம்ப வைத்து விற்பதும் அல்லது அடமானம் வைப்பதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

யார் இந்த வஞ்சித்தல் குற்றத்தை செய்தாலும் தண்டனைக்குரியது.

இ.த.ச 417



வஞ்சித்தல் குற்றத்தை யார் செய்ந்தாலும் அவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தணடனை விதிக்கப்படும்.


Section 417- Punishment for cheating

Whoever cheats shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine. or with both.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1877

இ.த.ச 418



யாரவது அவரது செயலால், தன்னோடு நட்பு பாராட்டும் மனிதருக்கு முறையற்ற இழப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும். அத்தகைய நபரைக் காக்க வேண்டிய பொருப்பு சட்டப்படியும் அல்லது சட்டப்பூர்வமான ஒப்பந்தப்படியும் இருக்கின்றது என்பதை உணர்ந்தப்பின்பும் , 

     அத்தகைய வஞ்சிக்கும் செயலை செய்யும் நபருக்கு , மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது  இரண்டும் சேர்த்து தணடனை விதிக்கப்படும்.


Section 418- Cheating with knowledge that wrongful loss may ensue to person whose interest offender is bound to protect


    Whoever cheats with the knowledge that he is likely thereby to cause wrongful loss to a person whose interest in the transaction to which the cheating relates, he was found, either by law, or by a legal contract, to protect, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both. 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

4 comments: