Wednesday 27 December 2017

தீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage





ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும்
ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர்  தீங்கியல் பொறுப்பு நிலைக்கு உள்ளாக்கப்படுவார்
என்பதே சேதமில்லாத் தீங்கு அல்லது தீங்கு உண்டு சேதம் இல்லை








உதாரணம் - Ashby vs White (1703) 2 Ld Rayn 938 என்ற வழக்கில் வாதி Ashby
என்பவரி தேர்தலில் வாக்களிக்க சென்றார் ஆனால் தேர்தல் அதிகாரி பிரதிவாதி White அவர்கள்
வாதியை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டார்கள்.


அந்த தேர்தலில் வாதி வாக்களிக்காமல்
போனாலும் அந்த தேர்தலில் வாதி விரும்பிய வேட்பாளரே வெற்றியும் பெற்றார், இருந்தாலும் வாதி தனக்கு ஏற்ப்பட்ட மனஉளைச்சலுக்கும் இழப்பிட்டுக்கும் இழப்பிடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்தார்கள் நீதிமன்றம்  தீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo என்ற சட்ட
முதுமொழியின் அடிப்படையில் பிரதிவாதி White  அவர்களால் எவ்விதமான சேதம்
ஏற்படாவிட்டாலும் வாதியின் வாக்களிக்கும் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது எனவே வாதிக்கு
ஏற்பட்ட தீங்கிற்கு பிரதிவாதி பொறுப்பெறுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.




இரண்டாவது உதாரணம்



Asharfi Lal எதிர் The Municipal Board of Agra என்ற வழக்கில் வாதியின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது, வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது வாக்களரின் சட்ட உரிமைக்கு ஏற்பட்ட இழப்பாக கருதி வாதி Asharfi Lal அவர்களுக்கு சட்ட உரிமைக்கு ஏற்ப்பட்ட தீங்காக கருதி தீர்ப்பு வழங்கப்பட்டது .

தீங்கில்லா சேதம் - Domnum sine injuria





அதாவது ஒருவருக்கு சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தாமல் சேதம் உண்டாக்குவது தீங்கில்லா சேதம்


உதாரணம் gloucester எதிர் grammar school case என்ற வழக்கில் வாதி-எ என்பவர் நடத்தி வந்த பள்ளிக்கு அருகிலே பிரதிவாதி-பி என்பவர் புதியதாக ஒரு பள்ளியை துவங்கினார் காலப் போக்கில் வாதி-எ என்பவரின் பள்ளியிலிருந்து பல மாணவர்கள் பி என்பவரின் பள்ளியில் சேர்ந்தார்கள் 


இதனால் வாதி-எக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது வாதி-எ நீதிமன்றத்தை அனுகினார் நீதிமன்றம் வாதி-எ  ன் கோரிக்கையை நிராகரித்தது. பிரதிவாதி-பி க்கும் பள்ளிகூடம் தொடங்க அனுமதி இருக்கின்றது


சட்டப்படி வாதி-எ என்பவரின் சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தப் படவில்லை
என தீர்ப்பு வாதிக்கப்பட்டது. பிரதிவாதி-பி வெற்றியும் பெற்றார்.


இரண்டாவது உதாரணம் - Chasemore vs Richards


என்ற வழக்கில் வாதி Chasemore 60 ஆண்டுகளுக்கு மேலாக நீரால் இயங்கும் ஆலை ஒன்றை  நடத்திவந்தார் தன்னுடைய ஆலை இயங்குவதற்கு அருகில் இருந்த ஆற்றின் நீரை பயன்படுத்தி
வந்தார்.


பிரதிவாதி Richards என்பவர் சுகாதார மையம் ஒன்றை நிறுவி அதற்கு தேவையான நீரை பெற ஆற்றின் அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டி நீரை பயன்படுத்திவந்தார்
இதனால் வாதியின் நீர் தேவைக் குறைந்தது வாதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.


தன்னுடைய இழப்பிற்கு வாதி Chasemore பிரதிவாதி Richards என்பவர் மீது வழக்கு தொடர்ந்தார்  வழக்கை விசாரித்த நீதிபதி வாதி, பிரதிவாதி இருவருக்கும் நீரைப் பயன்படுத்த உரிமை உள்ளது எனவும்,


மேலும் தன் நிலத்தில் கிணறு வெட்டவும் சட்டப்படி உரிமைப் பெற்றவர் பிரதிவாதி எனவும் வாதிக்கு ஏற்பட்ட இழப்புக்கு பிரதிவாதி பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டது.

கணித முரண் - அல்லது - Mathamatical Paradox









நமக்கு தெரியும் 3/3=1 என ஆனால் 1/3+1/3+1/3 = 0.9999999999 இது ஏன் எப்படி....
இது எவ்வாறு சாத்தியமாகின்றது


1/3=0.333333333333 என வைத்துக் கொள்வோம்.




மூன்று 1/3 பின்னத்தின் கூடுதல்


0.333333333333 + 0.333333333333 + 0.333333333333 = 0.9999999999


ஆகும்


ஆனால் 1 != 0.9999999999 அதாவது 1ம் 0.9999999999 ஒரு போதும் சமம் ஆகாது இதுவும் ஒரு கணித முரன்பாடாகும்.




பாராடாக்ஸ் என்பது புரிதலில் வெறுப்படும் என்பதே அனைவரின் கருத்து...
 
மேலும் விபரங்களுக்கு






 

Tuesday 26 December 2017

1729 - ராமானுசன்-ஹார்டிலி நம்பர்.







இது உலக அளவில் போற்றப்படும் ராமானுசன்-ஹார்டி நம்பர். ஒரு நாள் ஹார்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ராமானுசனை காண சென்றவர் இன்று டல்லான நாள் மேலும் நான் ஏறிய டாக்சி எண் கூட டல் நம்பர் என்கிறார் உடன் ராமனுசன் என்ன எண் என வினவினார் அவர் பதிலாக 1729 என்கிறார். உடன் ராமனுசன் இது ஒரு வித்தியாசமான எண் என்கிறார் ஹார்லி எப்படி என்கிறார்



இரண்டு வகைகளில் இந்த நம்பரைப் பெற முடியும் மிக சிறிய எண்களின்  முன்றின் அடுக்குகளினால் அங்கிலத்தில் CUBE என்பார்கள் உதாரணம் கீழ்










இதற்கேன் இந்த பதிவு என்கிறீர்களா இதோ வருகிறேன் விஷயத்திற்கு



இதை ராமனுசன் தன் மனக்கணக்கிலிருந்து பதில் கூறினார் இன்று CALC உபயோகிக்கும் நம்மால் இந்த பதிலை கூற முடியவில்லை இவர் தான் இன்றைய கணினி சங்கேத குறீயிட்டின் தந்தை இவரின் அக்கால கண்டுப்பிடிப்புகள் சில இன்று புதிய வடிவில்




1. ATM Card PIN Number


2. CAPTCHA - Number System


3. Random Rumber Generation


4. Hash Secure Key Generation for Password


5. PublicKey - Private Key Encryption


6. Four Number Lottery System


7. Mock Theta functions


8. ASCII to Number , Number to ASCII


9. Searching the Data in Disk with Mathematical Algorithm


இதுப்போல நிறைய கண்டுப்பிடிப்புகளை அவர் செய்தார் சிறு பிரளயம் முதற்கொன்டு அவர் லண்டனில் தினமும் தவறாமல் காலையில் அந்த தட்பவெப்ப நிலையில் குளித்து புஜை செய்தது அவருக்கு தீராத TB  நோயைத்தந்தது அதனால் தன் தாயார் மற்றும் மனையாட்டியை காணவந்தார் தாயகம் வந்தார். மிக குறைந்த வயதில் உயிர் நீத்தார். அவர் இன்றைய கணிணி உலகில் இருந்திருந்தால் நிறைய சாதனைகளை புரிந்திருப்பார்

பின்குறிப்பு மேலும் தகவல்களுக்கு இங்கு

இந்த பதிவு ஒரு டைம் பாஸ் பதிவல்ல நாமும் இதை நம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கனும்.

Friday 22 December 2017

சிம்சன் பாராடாக்ஸ் - தேர்தல் முரண்பாடு














இது புள்ளியலில் கருத்துத்துக் கணிப்பிலும் அதிகம் பயன் படும் ஒரு சூத்திரம் அதாவது கருத்து கணிப்பில் ஒருவன் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என நினைப்போம்....
 


ஆனால்.... நிஜத்தில் அந்த கருத்து கணிப்பு பொய்யாகி போய் வேறுஒருவர் வெற்றிப்பெறுவார்  இது தான் சிம்சன் பாராடாக்ஸ் அல்லது தலைக்கீழ் அல்லது தேர்தல் முரண்பாடு.






உதாரணம் - அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கிலாரி தான் ஜெயிப்பார் என அனைத்து மிடியாக்களும் கருத்துகணிப்பு கூறினார்கள் ஆனால் நிஜத்தில் வெற்றிப் பெற்றது டோனால்ட் டிராம்.





Sunday 10 December 2017

சாக்ரடிஸ் பாரடாக்ஸ்

 


எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும் சோ....
எனக்கு எதாவது தெரியும் தானே என்று அர்த்தம் இதை தான் சாக்ரடிஸ் முரண்பாடு - அதாவது சாக்ரடிஸ் பாரடாக்ஸ் என்கின்றார்கள்...




இனிமே யாரையும் பார்த்து உனக்கு ஒன்றும் தெரியாது என சொல்ல வேண்டாமே ...
 
"I know that I know nothing", 
"The only thing I know, is that I know nothing" or



"I know one thing; that I know nothing",





sometimes called the Socratic paradox, is a well-known saying that is derived from Plato's account of the Greek philosopher Socrates.

கமல்ஹாசன் பாராடாக்ஸ் - KAMALHASAN PARADOX





  "கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை.... இருந்தால் நல்லா இருக்கும்."


ஆம் இந்த வசனம் தசாவதாரம் என்ற படத்தில் வரும் வசனம் இதில் இரண்டும்  முரன்பட்ட வசனமாகும் அதாவது..




கடவுள் இருக்கார் என்றும் இல்லை, இல்லை எனவும்  எனவும்  அர்த்தம் புலப்படும் இது சாக்ரடிக்ஸ் முரண்பாடுகளுடன் ஒத்துபோகின்றது அதாவது


 எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும் சோ எனக்கு எதாவது தெரியும் தானே இதை தான் சாக்ரடிஸ் முரண்பாடு - அதாவது சாக்ரடிஸ் பாரடாக்ஸ் என்கின்றார்கள்...
 




"I know that I know nothing",
"The only thing I know, is that I know nothing" or
"I know one thing; that I know nothing",







sometimes called the Socratic paradox, is a well-known saying that is derived from Plato's account of the Greek philosopher Socrates.





இதுவும் ஒரு பாரடாக்ஸ் தான்  கண்டுப்பிடித்தது யார் அடியேன் நான் தான்.


இது ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே எவ்விதமான மன புண்படுத்த வேண்டும் என பதிவிடவில்லை கடவுள் இருக்கின்றார் என்பவருக்கு இருக்கார் இல்லை என்பவருக்கும் இல்லை என இருக்கார்


நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.

THE CARD PARADOX - அட்டை முரண்பாடு என்கிற பாரடாக்ஸ்



இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது பாரடாக்ஸ் பற்றி அதுவும் அட்டை பாராடாக்ஸ் என்கிற THE CARD PARADOX


ஒரு அட்டையின் ஒரு பக்கத்தில் அடுத்தப்பக்கத்தில் இருக்கும் வாசகம் உண்மை (The Sentence on the other side of the card is true) என கூறுகின்றது, ஆனால் அடுத்த பக்கத்தில் முதல் பக்கத்தில் இருக்கும் வாசகம் பொய்யானது (the sentence on the other side of the card is false) என கூறுகின்றது .






இதில் முதல் பக்கத்தில் கூறப்பட்டது போல இரண்டாம் பக்கத்தில் இருக்கும் வாசகம் உண்மையானால் முதல் பக்கத்தில் இருக்கும் வாசகம் பொய்யானதாகம் .
எனவே இரண்டில் ஒரு பக்கத்தில் இருக்கும் வாசம் உண்மையானது ...இதுதான் CARD PARADOX.

Thursday 2 November 2017

சட்டம் அறிவோம்...



சட்டம் அறிவோம்... சமாதானமாக வாழ்வோம்...

Thursday 28 September 2017

இ.த.ச 166 - பொது ஊழியர்களின் அத்துமீறுதல் குறித்து



இ.த.ச 166 -


அரசு பணியில் இருப்பவர்கள் அரசு நடத்தை விதிகளை கவனமாக கடைபிடித்து வர வேண்டும்.

அவ்வாறு அரசு பணியில் இருக்கும் பொது ஊழியர் பிறருக்கு தீங்கு உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் அல்லது தீங்கு நேரிடும் என்று தெரிந்தும் அரசு விதித்த வரைமுறைகளை மீறிச் செயல்படுவது குற்றமாகும்

அவ்வாறு

கடமையில் தவறினால் இ.த.ச. 166 - ன் கீழ் ஒரண்டு வரை அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

166. Public servant disobeying law, with intent to cause injury to any person.—

Whoever, being a public servant, knowingly diso­beys any direction of the law as to the way in which he is to conduct himself as such public servant, intending to cause, or knowing it to be likely that he will, by such disobedience, cause injury to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to one year, or with fine, or with both.


Illustration
---------------
A, being an officer directed by law to take property in execu­tion, in order to satisfy a decree pronounced in Z’s favour by a Court of Justice, knowingly disobeys that direction of law, with the knowledge that he is likely thereby to cause injury to Z. A has committed the offence defined in this section.



நன்றி பொது மக்களின் நலன் கருதியும் சட்ட கருத்து சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.

Sunday 10 September 2017

இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...நீட் வேண்டாம் ...



Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 படி சரியா.

மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..



மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..ருடம் நுழைவுத் தேர்வு எழுத சென்றேன் அப்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரயியல் கேட்கப்பட்ட பாதிக்கு மேற்ப்படட வினாக்கள் அனைத்தும் நாங்கள் படிக்காத வினாக்கள் எங்கள் பாட புத்தகத்திலும் இல்லை மேலும் நுழைவுத் தேர்வுக்கு என விற்கப்பட்டு என்னால் வாங்கப்பட்ட புத்தகத்திலும் இல்லை அவைகள் பெரும்பாலும் CBSE & ICSE பாட புத்தகத்திலிருந்து வந்தது என வெளியே வந்த பின்பு அந்த உயர்தர வசதி படைத்த மாணவர்களிடமிருந்து தெரிந்துக் கொண்டேன்.
ஏன் +2 மாணவர்களிடம் உங்கள் கொடுரம் அதிகாரம் ... 

தயவு செய்து இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...

சாது மிரண்டால் காடு கொள்ளாலாது ... காடே இந்த நிலை என்றால் ...

6ம் வகுப்பிலிருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் ... அது படிப்படியாக 7,8,9,10,11,12 என ஒவ்வொரு வருடமும் புதிய பாடத்திட்டம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

பின்பு தான் NEET முறைப்படி அமல்படுத்த வேண்டும் ... 



ஒரு குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 வருடம் ஆகும் அதைப் போல தான் நீட்டை உடனடியாக அமல்படுத்த கூடாது.
மேலும் நீட்டினால் வெளிப்படைத்தன்மை உண்டா என பார்க்க வேண்டும், வாக்களிக்கும் எந்திரத
பொதுவாக குழந்தைப் பிறந்து நடக்க வேண்டும் என்றால் 2 வருடம் ஆகும் பிறந்த குழந்தையை உடனடியாக நடக்க வைக்க வேண்டும் என்பது தவறானதாகும்.

மேலும் 18 வயது குறைந்தவர்களை நாம் இன்னும் Juveniles என்றே பார்க்கின்றோம், அவர்களின் சட்ட மீறுதல் மன்னிக்கப்படுகின்றது, இது உலகம் தோறும் உள்ள வழக்கம் அவர்களின் மீது நாம் சட்டத்தை புகுத்துவது தவறான சட்ட நடவடிக்கை.

இதை மத்திய மாநில அரசுகள் புரிந்துக் கொள்ள வேண்டும் ... 

என நீட்டை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

மேலும் நீட்டைப்பற்றிய புரிதலையும் உண்மையையும் உரக்க சொல்லவேண்டும். வாக்களிக்கும் எந்திரத்தின் உண்மை தன்மையை இன்றுவரை கானல் நீராக உள்ளது இதில் எப்படி நீட் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கலாம்.

பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில்.,....

Wednesday 6 September 2017

உரிமையியல் நடைமுறைச் சட்டம் - வழக்குரை, சம்மன் தொடர்பாக



Sec - 26,27 & 28 Of Civil Procedure Code 1908-


Sec - 26) வழக்கு தொடர்பாக -

எல்லா உரிமையியல் வழக்குகளும் வழக்குரையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது எவ்வாறு வழக்கு தொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் மூலம் நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும்.

Every suit shall be instituted by the presentation of a plaint or in such other manner as may be prescribed. 

Sec - 27) பிரதிவாதிக்கு - சம்மன் அனுப்புதல் தொடர்பாக

வழக்கானது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பின்பு, சம்மன் என்ற வழக்கின் சங்கதி குறித்த ஆவணத்தை பிரதிவாதிகளுக்கு அனுப்பபடவேண்டும் , சம்மன் எவ்வாறு அனுப்பபட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளதோ அவ்வாறு அனுப்ப பட வேண்டும் அதே நாளில் அல்லது வழக்கு தொடர்ந்தக 30 நாளுக்குள் பிரதிவாதிக்கு சம்மன் அனுப்பட வேண்டும்,

27. Summons to defendants .- Where a suit has been duly instituted, a summons may be issued to the defendant to appear and answer the claim and may be served in manner prescribed on such day not beyond thirty days from date of the institution of the suit..



Sec - 28) பிரதிவாதி வேறு மாநிலத்தில் வசித்தால் எவ்வாறு சம்மன் அனுப்புவது.


ஒரு சம்மன் பிரதிவாதிக்கு அனுப்ப படும் போது அவர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தால் அந்த மாநிலத்தின் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுப்ப வேண்டும்.
மேலும் சம்மன் அனுப்ப படும் மாநிலத்தின் மொழியும் சம்மன் பெறப்படும் மாநிலத்தின் மொழியும் வெவ்வேறாக இருப்பின் அதனை அந்த மாநிலத்தின் மொழியில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்.

அந்த மாநில நீதிமன்றத்தின் ஆட்சி மொழி இந்தியாக இருப்பின் இந்தி அல்லது
இந்தி அல்லது ஆங்கிலமா இருப்பின் இந்தி அல்லது ஆங்கிலமாகவோ அந்த சம்மனையும் வழக்குரையைும் மொழிமாற்றம் செய்து அனுப்ப வேண்டும்

28. Service of summons where defendant resides in another state .- (1) A summons may be sent for service in another State to such court and in such manner as may be prescribed by rules in force in that State.

(2) The Court to which such summons is sent shall, upon receipt thereof, proceed as if it had been issued by such court and shall then return the summons to the court of issue together with the record (if any) of its proceedings with regard thereto.

(3) Where the language of the summons sent for service in another State is different from the language of the record referred to in sub-section (2), a translation of the record,

(a) in Hindi, where the language of the court issuing the summons is Hindi, or (b) in Hindi or English where the language of such record is other than Hindi or English,
shall also be sent together with the record sent under that sub-section. 



ஒப்புறுதி - இந்த விளக்கம் பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் , சட்டத்தை எளிய தமிழில் விளக்கும் விதமாக அனுப்புகிறேன். மேலும் இதை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது, வழக்குரியதல்ல.

Saturday 2 September 2017

நீட் குறித்த ஒரு முக்கிய புரிதல்






    நண்பர் ஒருவர் கூறுகையில் குறைந்தபட்சம் ஓராண்டு விலக்கு அளித்துருந்தால் கூட இந்த மரணம் நிகழ்ந்து இருக்காதே. என கருத்து தெரிவித்தார்கள்.

ஒராண்டு இல்லை 10 ஆண்டுகள் வரை விலக்கு அளித்தாலும் நம்முடைய மாணவர்களால் நீட்டை எதிர் கொள்ள முடியாது ஏனேன்றால் நமது நாட்டில்

மாநில கல்விமுறை - State Syllabus , CBSE Syllabus, ICSE Syllabus என உள்ளது இந்த CBSE மற்றும் ICSE Syllabus களில் மாநில கல்வி முறையை விட இரண்டு வருடம் முன்னிலை வகிக்கின்றார்கள்.

அதாவது நம்முடைய மாநில கல்விமுறையில் 10ம் வகுப்பு படிப்பவர்களுக்கு மற்ற கல்விமுறையில் படிப்பவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு கல்விமுறை பயிற்றுவிக்கப் படுகின்றது.

நம்முடைய மாநில கல்விமுறையில் 12ம் வகுப்பு படிப்பது சற்றே பின்தங்கியது, அந்த நிலையில் CBSE மற்றும் ICSE Syllabus களில் கல்வி பயிலுபவர்கள் கல்லூரிக்கு இணையாக முதலாம் ஆண்டு பாடத்திட்டற்கு ஈடாக இருக்கும்.

ஆகையால் அவர்களுக்கு கேட்கப்படும் கேள்வி எளிதாக இருக்கும் இதனால் அவர்களால் எளிதாக NEET, COMET, NIIT, CET போன்ற தேர்வுகளை எளிதாக அனுகவும் வெற்றிப் பெறவும் முடிகின்றது.

காலம் காலமாக தமிழில் படிக்கும் நம்மால் இதை எப்படி எதிர் கொள்ளமுடியும்,
 

அதற்கான ஒரே தீர்வு இந்தியா முழுவதும் ஒரே விதமான பாடதிட்டத்தை கொண்டு வரவேண்டும், அப்போது தான் இந்த நிலையை களைய முடியும் அதுவும், 6 அல்லது 8ம் வகுப்பு முதல் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு வந்தப்பின்பு தான் இந்த NEET தேர்வை அறிமுகப்படுத்த வேண்டுமே ஒழியே உடனே அடுத்த வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து என அறிமுகப்படுத்த முடியாது.

மேலும் Choose the Best Answer போன்ற தேர்ந்த எடுக்கும் விடையை அளித்தால் அதனை சிலர் கள்ள சந்தையில் விற்று காசும் பார்க்கும் நிலை உள்ளது ஆகையால் தேர்வு முறையில் அவர்களின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Entrance Test மார்க் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

ஏன் என்றால் பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் தகிடுதத்தம் செய்தும், கம்யூட்டரை கவனித்தும் மார்க் எடுத்துவிடுகின்றார்கள் ஆனால் உண்மையில் கஷ்டப்பட்டு படிக்கும் ஏழைமாணவர்களுக்கு மருத்துவம், என்.ஆய்டி போன்ற படிப்புகள் எட்டா கனியாக உள்ளது.

இதனை தயவு செய்து மத்திய மாநில் அரசுகள் கவனத்தில் எடுத்து, உடனடியாக நீட்டை அமல் படுத்தாமல் மாநில பாடதிட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி பின்பு இத்தகைய தேர்வை நடத்தட்டும்.

எல்லா இடத்தையும் யார் பிடிக்கின்றார்கள் என பார்ப்போம், கடல் திமிங்கிலத்தை குளத்து மீனுடன் போட்டி போட முடியுமா .....?

போட்டி தேர்வுகள் பொதுவாக பொட்டி தேர்வாகவே இருக்கின்றது ... பணம் தான்..

As per reports, a total of 11, 38,890 students registered for this examination including 1522 NRIs, 480 OCIs, 70 PIOs and 613 Foreigners. This exam was conducted in 10 languages at 1921 exam centres in 103 cities. thanks to http://indiatoday.intoday.in/education/story/neet-paper-leak-2017/1/948271.html

     பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். அதிகம் பகிரவும்.

Wednesday 9 August 2017

இ.த.ச 354D - பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking)







(1) - எந்த மனிதராவது அவர்

1 - ஒரு பெண்னை பின் தொடர்வதும் அல்லது தொடர்புக் கொள்வதும் அல்லது அவரை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் அல்லது தம்முடைய விருப்பத்தை தினிக்கும்படி அவரை பின்தொடர்வதும் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தும் அவருக்கு வேண்டியதை செய்வதும்.

2 - ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவருடைய இன்டர்நெட் வசதி அல்லது மின்னஞ்சல், அல்லது அவருடைய தனிப்பட்ட மின் சாதன தொடர்புகளை கண்கானிப்பதும் பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking) என்ற குற்றமாகும்.



மேல் சேர்க்கைக்காக ஒரு ஆணை பின் தொடர ஒரு அரசால் ஆனையிப்பட்டு அதனால் அந்தப் பெண்னை பின்தொடர்வது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

(i) -- ஒரு மனிதர் சட்டப்படி நியமிக்கபட்ட அரசால் அல்லது அரசாங்கத்தால் அவ்வாறு ஒரு பெண்ணை பின் தொடர வேண்டும் ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரை பின் தொடர்வதும் அவரது மின் சாதன இனைப்புகளை பயன்படுத்துவதும் , மின் தொடர்புகருவிகளை பயன் படுத்துவதும் மின்னஞ்சலை பரிசோதிப்பதும் குற்றமாகாது அல்லது இந்தப் பிரிவு கட்டுப்படுத்தாது அல்லது.



(ii) -- இந்தப் பிரிவானது ஒரு நிலுவையில் உள்ள சட்ட பிரிவின் கீழ் இவ்வாறு பின் தொடர்வது தவறில்லை என எந்த ஒரு சட்டத்தினாலும் அல்லது எந்த ஒரு நபரினாலும் சட்டப்படி ஆணையிடும் போது இந்தப் பிரிவு கீழ் அந்த பின் தொடர்வது அடங்காது. அல்லது

(iii) -- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய பெண்னை தொடர்புக் கொள்வதும் அல்லது தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் நியாயமானதும் சட்டப்படியானது எனக் கருதப்படும் போது குற்றமாகாது.


(2) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு  மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும்,  தொடர்ந்து இதே குற்றத்தை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.



IPC 354D: Stalking1

(1) Any man who—
       
  1. follows a woman and contacts, or attempts to contact such woman to foster personal interaction repeatedly despite a clear indication of disinterest by such woman; or
  2.    

  3. monitors the use by a woman of the internet, email or any other form of electronic communication,commits the offence of stalking;
 Provided that such conduct shall not amount to stalking if the man who pursued it proves that—
       
  1. it was pursued for the purpose of preventing or detecting crime and the man accused of stalking had been entrusted with the responsibility of prevention and detection of crime by the State; or
  2.    
  3. it was pursued under any law or to comply with any condition or requirement imposed by any person under any law; or
  4.    
  5. in the particular circumstances such conduct was reasonable and justified.
 (2) Whoever commits the offence of stalking shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine.

1 Criminal Law (Amendment) Act, 2013


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Monday 31 July 2017

இ.த.ச 510 - போதையில் பொது இடங்களில் தவறாக நடந்தால்



இ.த.ச 510



    யாராவது , குடி போதையில் பொது இடத்தில் நடமாடுவதும் அல்லது போதையில் அத்தகைய நபர் செல்லக்கூடாது என்று இருக்கும் ஒரு இடத்திற்குள் அத்துமீறி செல்வதும் மேலும் அத்தகைய போதையில் பிறருக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவதும் குற்றமாகும்.

     இத்தகைய குற்றத்தைப் புரிந்த அந்த நபருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் வெறுங்காவல் அல்லது பத்து ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 510- Misconduct in public by a drunken person



    Whoever, in a state of intoxication, appears in any public place, or in any place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, 

      shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten rupees, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1977


பொறுப்புறுதி - இந்த பகுதியில் உள்ள சட்ட விளக்கங்களை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், இது பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுன்றது. அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Thursday 6 July 2017

இ.த.ச 498 - பிறருடைய மனைவியை கவர்த்தலும் மறைத்து வைத்தலும்



           யாராவது, பிறருடைய மனைவி அல்லது பிறருடைய மனைவி என்று அறிந்த ஒரு பெண்ணை அல்லது பிறருடைய மனைவி என்று உணர்வுவதற்கேற்ற வாய்ப்பிருந்தும் , 
         
            அந்தப் பெண்னை அவளுடைய கணவனிடமிருந்து அல்லது கணவன் சார்பில் பாதுக்காக்கும் ஒரு பொருப்புடையவரிடமிருந்து, 
     வேறு ஒருவருடன் முறைக்கேடான புணர்ச்சி செய்யும் பொருட்டு அழைத்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி இழுத்து செல்வதும் குற்றமாகும்.

     அந்தப் பெண்னை அத்தகைய காரணத்துடன் மறைத்து வைப்பதும் , தடுத்து வைப்பதும் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 498- Enticing or taking away or detaining with criminal intent a married woma
n


        Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman,

        shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 
நன்றி - 
 
படம்1-http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section276.html
படம்2-https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEmBV1TmyZb5ah-WwsRq3Ej6Z5IvvJgC6bkn-3lPjXzeWin7qOogcfQ13b5LO4p99JlhgqSwj1u_utWsmr-SIQrF8NDaCwUQZMAPEFLkzFIDxtMLrZaN98iU_xok3969qu9ZnrOCKLxF3/s1600/jtpbmh.jpg



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.

Wednesday 14 June 2017

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.



திருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரிக்கு போதிய மருத்துவர்கள் இல்லாதலால் சிகிச்சையை தொடரமுடியாத நிலை 

அதனைத் தொடர்ந்து அந்த சகோதரி திருவள்ளூர் மாவட்ட அரசினர் மருத்துவமனைக்கு சென்றப் போது அங்கும் அதே நிலைமைதான் ... அங்கும் போதிய மருத்துவர்கள் இல்லை ... இன்னும் அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளார்..


உடனடியாக அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் மாநில, மாவட்ட மற்றும் மருத்துவதுறை நிர்வாகம் கண்டுக் கொள்ளுமா... தயவுசெய்து அதிகம் பகிரவும்... அதிகம் பகிரவும்.


திருத்தணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு அவசர சிகிச்சை என்றால் அவர்களை வேலூருக்கோ அல்லது திருப்பதி அல்லது சென்னைக்கோ தான் அழைத்து செல்லவேண்டும் ...

ஏன் என்றால் திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், உயர்தர மருத்துவ உபகரணங்களும் இல்லாதது தான் இதனை அரசு கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய அலட்சியம் ஏற்படாமல் அவசர சிகிச்சைக்கு தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். பொது மக்களுக்கு அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகின்றேன்.

திருத்தணி அரசு மருத்துவமனையின் அவலநிலை.



திருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரிக்கு போதிய மருத்துவர்கள் இல்லாதலால் சிகிச்சையை தொடரமுடியாத நிலை 

அதனைத் தொடர்ந்து அந்த சகோதரி திருவள்ளூர் மாவட்ட அரசினர் மருத்துவமனைக்கு சென்றப் போது அங்கும் அதே நிலைமைதான் ... அங்கும் போதிய மருத்துவர்கள் இல்லை ... இன்னும் அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளார்..


உடனடியாக அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் மாநில, மாவட்ட மற்றும் மருத்துவதுறை நிர்வாகம் கண்டுக் கொள்ளுமா... தயவுசெய்து அதிகம் பகிரவும்... அதிகம் பகிரவும்.


திருத்தணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு அவசர சிகிச்சை என்றால் அவர்களை வேலூருக்கோ அல்லது திருப்பதி அல்லது சென்னைக்கோ தான் அழைத்து செல்லவேண்டும் ...

ஏன் என்றால் திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், உயர்தர மருத்துவ உபகரணங்களும் இல்லாதது தான் இதனை அரசு கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய அலட்சியம் ஏற்படாமல் அவசர சிகிச்சைக்கு தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.


பொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். பொது மக்களுக்கு அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகின்றேன்.

Friday 26 May 2017

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்






சென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை ஜெயலலிதா திறந்து வைக்கப்பட்டது.

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும் இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.

விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks - http://tamil.samayam.com/…/three-n…/articleshow/58851648.cms

படம் - தினகரன் நாளிதழ்

Ignorantia juris non excusat




Ignorantia juris non excusat - "ignorance of law excuses no one"

அதாவது எனக்கு சட்டம் தெரியவில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது முதுமொழி...

சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...

சட்டம் படிப்போம் சமுக அவலம் போக்குவோம், பல ஆயிரம் செலவு செய்து டாக்டர் , இஞ்சினியர் படிப்பதை விட சட்டம் படித்தால் நமது வருங்காலம் மட்டுமே சிறப்பாக இருக்கும்... 





சட்டம் படிப்பது நமது வருமானத்திற்காக அல்ல மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக ...
மக்கள் சட்டம் தெரியாமல் அவதிபடுவது கொஞ்சம் நஞ்சம் இல்லை, புகார் கொடுத்தால் அவன் மீதே குற்றம் சாட்டப்படும், எதிர்த்து கேட்டால் எதிரியைபோல பார்ப்பார்கள்... கூனி குனிந்தது போதும்

சட்டம் படிப்போம் ... அறியாமையை போக்குவோம்...

நீதிக்காகவும் நியாத்திற்காக போராடவும் ... சட்டம் தெரியவேண்டும் .... ஆகையால் ஏனோ ஒரு பட்டம் படிக்க வேண்டும் என்பதை விட சட்டம் படித்துவிட்டு தெளிவாக இருக்காலாம்..

பயத்திற்கான மூல காரணம் அறியாமையும் தவறுமே
சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...

சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...



Wednesday 17 May 2017

இலவச கல்வி சட்டம் தொடர்பான



இணையத்திலிருந்து பெறப்பட்டது, மக்களின் நலனுக்காக நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.   

Tuesday 18 April 2017

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் - 2009



நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிப்பது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்

100% இலவச கல்வி அளிக்க வேண்டிய அரசுகள் இன்று கண் துடிப்பாக RTE
எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தை இயற்றயுள்ளது
 2011 ம் ஆண்டு முதல் இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி - இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் மெட்ரிக் மற்றும் CBSE / ICSE பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவும் இன்றி 8-ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயிலுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில அரசாங்கங்கள் செலுத்திவிடும்.
- இச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கென தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகூடங்கள் ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.

- எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்? - அனைத்து மெட்ரிக், CBSE/ICSE தனியார் சுயநிதி பள்ளிகள் (சுயநிதி சிறுபான்மை பள்ளி நீங்கலாக),

- LKG மற்றும் முதல் வகுப்பு - ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள். - ஆறாம் வகுப்பு - மூன்று  கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்

- விண்ணப்பங்கள் எங்கு பெறலாம்? - பள்ளி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம்  மற்றும் துவக்க கல்வி அலுவலகம்.


மேலும் பல தகவல்களுக்கு - http://tnmatricschools.com/rte/rtepdf.aspx



- விண்ணப்பிக்க கடைசி நாள்: 18. 05. 2017
யாரெல்லாம் பயன்பெற முடியும்?
- 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நலிந்த பிரிவைச்
சேர்ந்தவர்களின் குழந்தைகள், அனாதைகள், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி , பி.சி வகுப்பினர், திருநங்கைகள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர், துப்புரவாளர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளின் குழந்தைகள்.

தேவையான ஆவணங்கள் என்ன?
- வருமான சான்றிதழ், 

- சாதிச் சான்றிதழ் மற்றும் 
- பிறப்பு சான்றிதழ்.

- மேலதிக விபரம் மற்றும் புகார்களுக்கு:- Directorate of Matriculation Schools
- தொலைபேசி: 044 - 28270169
- SMS: 9442144401, 9443574633
E-mail : dmschennai2010@gmail.com


தகவல்கள் - http://rowtiram.blogspot.in/2015/06/blog-post_42.html