Tuesday 23 February 2016

தினம் ஒரு சட்டம் - இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு செய்ந்ததாக பொய் வழக்கு பதிவு செய்ந்தால்


இ.த.ச 389
       ஒருவரிடமிருந்து அல்லது அவருக்கு வேண்டிய ஒருவர் மீது பொய்யாக அச்சுறுத்திப் பொருள் பறிக்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் மீது அல்லது மற்றவர் மீது மரணத்தண்டனைக்கு ஏதுவான 



  அல்லது ஆயுள் தண்டனைக்கு ஏதுவான அல்லது பத்து வருடம் வரைத் சிறைத்தண்டனைக் ஏதுவான  ஒரு குற்றம் புரிந்தார் அல்லது  ஒரு குற்றம் புரிய முயற்சித்தார் என பொய்யாக ஒரு வழக்கு தொடுப்பது குற்றமாகும்.  

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.



அவ்வாறு சுமத்தப்படும் குற்றம் இ.த.ச 377 வது பிரிவின் கீழ் இயற்க்கைக்கு மாறான பாலியல் குற்றமானால் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை இயற்கைக்கு மாறாக கெடுத்து விட்டார் அவ்வாறு கூறுபவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்) - அந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரியதாக இருப்பின் அச்சுறுத்திப் பொருள் பறிப்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.  
  



Section 389- Putting person in fear of accusation of offence, in order to commit extortion

    
    Whoever, in order to the committing of extortion, puts or attempts to put any person in fear of an accusation, against that person or any other, of having committed, or attempted to commit an offence punished with death or with *[imprisonment for life], or with imprisonment for a term which may extend to ten years, 

    shall be punished with imprisonment of either description for term which may extend to ten years, 

    and shall also be liable to fine; and, if the offence be punished under section 377 of this Code, may be punished with *[imprisonment for life].

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956). 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment