Friday 12 February 2016

தினம் ஓரு சட்டம் - கடுஞ்சினம் ஏற்பட்ட நிலையில் வன்முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதல்

இ.த.ச 358 

       யாராவது ஒருவர், மற்றோருவரை கடுஞ்சினத்துக்கு உண்டாக்கி அதனால் அவர் வெகுண்டு, அந்த நிலையில் அவர் ஒருவரை வன்முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதலும் குற்றமாகும். 


     இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரையில் சிறைக்காவல் அல்லது இரு நூரு ருபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம் - இ.த.ச பிரிவு 352ல் கூறியுள்ள விளக்கம் இந்தப் பிரிவிற்கும் பொருந்தும்.

அதாவது, 

1-தானே வலிய போய் ஒரு குற்றத்தை செய்ந்து அதனால் கடுஞ்சினம் உண்டானால் ( plaintiff is the wrongdoer) , இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது.

2-சட்டப்பூர்வமான முறையில் ஒரு காரியம் ஒரு பொது ஊழியரால் செயல்படுத்தப்படுகின்றது அப்போது அந்த செயலால் கடுஞ்சினம் உண்டானால், இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது

3-சட்டப்படி ஒருவர் தனக்குரிய தற்காப்புபை பயன்படுத்துகிறார் அப்போது அவரின் செயலால்
கடுஞ்சினம் உண்டானால் (plaintiff is the wrongdoer), இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது.




Section 358- Assault or criminal force on grave provocation


    Whoever assaults or uses criminal force to any person on grave and sudden provocation given by that person, 


    shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to two hundred rupees, or with both.

Explanation: - The last section is subject to the same Explanation as section 352.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment