Friday 5 February 2016

தினம் ஒரு சட்டம் - காயம் - கொடுங்காயம் என்றால் என்ன....?




இ.த.ச 319 - காயம்

     யாராவது ஒருவருடைய உடலுக்கு ஒரு வலி அல்லது நோய் அல்லது ஒரு குறைப்பாட்டினை உண்டாக்கினால் அதனை காயப்படுத்தல் என்கிறோம்




Section 319- Hurt
 
   Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause hurt. 




 
இ.த.த 320  - கொடுங்காயம் 

யாராவது அடுத்தவருக்கு கீழ் காணப்படும் காயத்தை உண்டாக்கினால் அது பெருங்காயம் எனப்படும்

முதலாவது, ஆண்மையை இழக்க செய்தல்

இரண்டாவது, நிரந்தரமாக ஏதாவது ஓரு கண்ணின் பார்வையை இழக்க செய்தல்

முன்றாவது, நிரந்தரமாக காதில் கேக்கும் தன்மையை இழக்க செய்தல்

நான்காவது, உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்றை சேதப்படுத்துதல் அல்லது இனைப்புகளில் ஒன்றை செயல் பட விடாமல் செய்தல்

ஐந்தாவது,   உடலில் உள்ள உறுப்புகளில் ஏதாவது ஒன்றினை அல்லது இனைப்புகளில் ஒன்றை நிரந்தரமாக இழக்கும்படி செய்தல்

ஆறாவது, முகம் அல்லது தலையில் நிரந்தரமாக மாற்றம் ஏற்படுத்தி உருக்குலைத்தல்

ஏழுாவது, எலும்பை முறித்தல் அல்லது பல்லை உடைத்தல்

எட்டாவது, எந்தக் காயமாவது அடிப்பட்டவருக்கு இருபது நாட்களுக்கு கடும் துன்பம் அல்லது இருபது நாட்களுக்கு வழக்கமாக செய்யக்கூடிய வேலையை செய்யவிடாமல் தடுக்க கூடிய காயம் அல்லது உடலின் மாற்றம்

ஆகியவைகள் கொடுங்காயம் எனக் கொள்ளப்படும்.


Section 320- Grievous hurt
The following kinds of hurt only are designated as "grievous"

First. - Emasculation.

Secondly. - Permanent privation of the sight of either eye.

Thirdly- Permanent privation of the hearing of either ear.

Fourthly. - Privation of any member or joint.

Fifthly. -Destruction or permanent impairing of the powers of any member or joint.

Sixthly. - Permanent disfiguration of the head or face.

Seventhly. - Fracture or dislocation of a bone or tooth.

Eighthly. - Any hurt which endangers life or which causes the sufferer to be during the space of twenty days in severe bodily pain, or unable to follow his ordinary pursuits.




 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment