Wednesday 2 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் கள்ள ஒட்டு மற்றும் ஆள் மாறாட்டம் செய்வதும்


இ.த.ச 171ஈ

        யாராவது, தேர்தலில் ஒட்டளிக்கும் போது ஒட்டுத்தாளிலும் அல்லது வாக்கு சீட்டிலும் பிறருடை பெயரில் ஒட்டளித்தாலும், அந்த நபர் இறந்திருந்தாலும் அல்லது கற்பனைப் பெயராக இருந்தாலும் குற்றமாகும்.


        மேலும் ஒருவர் தன்னுடைய பெயரில் ஒருமுறை வாக்களித்து விட்டு மேலும் ஒரு முறை வாக்களிப்பதும் அல்லது பிறருடைய பெயரில் வாக்களிப்பதும் அல்லது ஒட்டுப் போட முயற்சிப்பதும் குற்றமாகும். இதை செய்வது தேர்தலில் ஆள்மாறட்டம் செய்ததாக கருதப்படும். இவ்வாறு செய்வதற்கு ஆட்களைப் பிடிப்பதும் அல்லது ஆட்களை பிடிக்க முயற்சிசெய்வதும் அல்லது இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமாகும்.

        [இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளவைகள் அந்த நேரத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சட்டத்தால் தனக்கு பதில் ஒருவர் வாக்களிக்கலாம் என ஒருவரை நியமிக்கும் போது இந்தப் பிரிவில் அடங்காது. எவ்வாறு எனில் ஒருவரால் சரியான பார்வை இல்லாமல் இருக்கலாம் அவரால் சரிவர ஒட்டளிக்க இயலாது அப்போது நிலுவையில் உள்ள சட்டம் அனுமதிக்கும் என்றால் இந்தப் பிரிவின் கீழ் அது குற்றமாகாது.]




Section 171-D- Personation at elections
Whoever at an election applies for a voting paper or votes in the name of any other person, whether living or dead, or in a fictitious name, or who having voted once at such election applies at the same election for a voting paper in his own name, and whoever abets, procures or attempts to procure the voting by any person in any such way, commits the offence or personation at an election.

*[Provided that nothing in this section shall apply to a person who has been authorised to vote as proxy for an elector under any law for the time being in force in so far as he votes as a proxy for such elector.]

* Ins. by Act 24 of 2003, sec. 5.
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

No comments:

Post a Comment