Friday 4 September 2015

தினம் ஒரு கடமை - தேசத்தையும் தேசிய சின்னங்களை மதித்தல்

     இது வரை இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு வழங்கிய உரிமைகளைப் பார்த்தோம் இனி கடமைகளைப் பார்ப்போம்.

இந்திய அரசியலமைப்பு சாசனம் - 51 A - (1)

- இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும் அதன் உயரிய நோக்கங்களை பின்பற்றவும் மேலும் அதன் படி உருவாக்கப்பட்டுள்ள கொள்கைகளையும் அமைப்புகளையும் மதிக்கவும், நம் நாட்டின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்கவும்.


(a) to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem; 



- நமது நாட்டின் தேசிய விடுதலைக்கு அடிப்படையாக அமைந்த கொள்கைகளையும் போற்றவும் பின்பற்றவும்.


(b) to cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom; 


- இந்திய தேசத்தின் ஒப்புயர்வற்ற தன்மையைக் காக்கவும் நம் தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டை காக்கவும்.


(c)  to uphold and protect the sovereignty, unity and integrity of India;
- தாய் நாட்டைக் பாதுகாப்பதற்கும்  மற்றும் நாட்டை பாதுக்காக்க அழைக்கும் போது சேவைச் செய்ய முன் வரவேண்டும்.

(d) to defend the country and render national service when called upon to do so;
http://indiankanoon.org/doc/867010/
 தொடரும்....


தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

9 comments: