Friday 30 September 2016

தனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...




பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.  திருக்குறள்:972


குறள் விளக்கம்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.




சென்னை 30-09-2016: தற்போது மான்புமிகு தமிழகமுதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கா தனியார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.. 


அம்மா அவர்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப என் மனதார கடவுளை பிராத்திக்கின்றேன்.
சாமன்ய குடிமகனாகிய எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கின்றது.. இன்று தமிழக மக்களால் எத்தனை லட்சம் பேர் இத்தனை பெரிய மருத்துவமணையில் சிகிச்சைப் பெற முடியுமா...ஏன் சென்னையில் பல அரசு மருத்துவமணைகள் இருக்க அம்மா அவர்கள் அப்போலோ மருத்துவமணை சென்று சிகிச்சை பெற வேண்டும்.. ஏன் என்றால் இங்கு தான் நன்றாக சிகிச்சை அளிப்பார்கள்.. நவீன மருத்துவ உபகரணங்கள் இருக்கும்...திறமை வாய்ந்த மருத்துவர்கள் இருப்பார்கள்..


அப்படி என்றால் அரசு மருத்துவமணைகளில் என்ன குறையுள்ளது என மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கண்டு அதனை சீர் செய்ய வேண்டும்.


நாங்கள் சாமான்ய மக்கள், சிகிச்சைக்கு செல்லும் ஒரே இடம் அரசு மருத்துவமனை தான், மான்புமிகு அம்மா அவர்களே இந்த குறைப்பாடு இப்போது உணர்ந்திருப்பீர்கள் என மனதார நம்புகின்றேன்..
இனி தங்களுக்கு உடல்நல குறைவே வராது வந்தாலும் தாங்களால் இயன்றளவு அரசு மருத்துவமணைக்கு செல்லவேண்டும்.. அரசு மருத்துவமனையின் சீர்பாடு செயல் திருத்தம் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் அரசு மருத்துவமணை அனைத்தையும் கண்காணிக்கவும், அரசு மருத்துவமணைக்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களையும், ஒவ்வொரு தாலுக்காவிலும் மருத்துவ கல்லூரியும், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும், வரும் பட்ஜெட்டில் அம்மா அவர்கள் அறிவிப்பார்கள் என நம்புகின்றேன்.
மேலும் தற்பொது தாங்களால் தொடங்கி நடத்தப்படும்.. அம்மா மருத்துக் கடையை மேலும் விரிவிபடுத்தவும் வேண்டுகிறேன். 



மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழவும், தமிழகத்தை சீரும் சிறப்புடனும் ஆளவும் வாழ்த்துக்கின்றேன். இதை யாரையும் குறை சொல் அல்ல இருப்பதை நிறைவாக்க.



உதாரணம் - இன்று விருத்தாசலத்தில் ஒரு சாலை விபத்தில் உயிருக்கு போராடுபவரை அழைத்து வந்தால் மருத்துவமனையிலிருந்து வரும் முதல் பதில் கடலூர் , பான்டி கொண்டு செல்லுங்கள் என்பது தான் ஆனால் எத்தனை பேர் போகும் வழியில் இறந்தால்கள் என அனுபவப்பட்டவர்களுக்கு தான் தெரியும், 

எனது தாயாரும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமணைக்கு கொண்டு சென்றோம்... மருத்துவமனையில் கடலூர் கொண்டு செல்ல கூறினார்கள் அதற்குள் ரத்தம் கட்டி பேச முடியாமலும், கை கால் நடக்க இயலாமலும் சென்றது இந்த நிலையாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு
 

இதனை யாரையும் குறை குற்றம் சொல்ல பதிவிடவில்லை பொதுமக்களின் நலன் கருதியும் எதிர்காலத்தில் நமது தமிழகம் மருத்துவதுறையில் சாதனை படைக்கவும், அனைவருக்கும் நல்ல சுகாதாரம், மருத்துவம் கிடைக்கவும் பதிவிடுகின்றேன்..

அதிகம் லைக் மற்றும் பகிருங்கள்....

No comments:

Post a Comment