Sunday 12 March 2017

ஆதார் மூலம் பொது மக்களின் கருத்து கேட்பு



10, 00, 000 மக்களின் நலத்திட்டத்தை ஒருவர் முடிவு செய்கின்றார், ஆகையால் ஆதார் மூலம் மக்களின் கருத்து கேட்டு பின்பு முடிவு செய்யப்படுமா .... 
 

ஆதாரில் அரசாங்கம் கொண்டுவரும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் அதற்கேன OTP எனும் கடவு சொல்லை அரசு அவர்களின் செல்பேசிக்கு அனுப்ப வேண்டும், அதைக் கொண்டு அவர் அந்த திட்டத்தின் பக்கத்திற்கு சென்று வாக்களிக்கவோ அல்லது கருத்து கூறவோ வேண்டும்....

அதன் பின்பு தான் அரசானது எந்த திட்டத்தையும் முடிவு செய்ய வேண்டும். 802 பாரளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு எப்படி 120 கோடி மக்களின் மனநிலையை அல்லது கோரிக்கையை கட்டுப்படுத்தும்...
 
 

மேலும் அன்றைய கால கட்டத்தில் ஊழல் என்பது இல்லாமல் இருந்தது ஆனால் இன்றைய நாட்களில் தினம் ஒரு ஊழல் நாம் பத்திரிக்கையில் வாசிக்கின்றோம்.. ஆதனால் ஒரு முறை ஆட்சி பொருப்பில் இருப்பவர்கள் அடுத்த முறை மாற்றப்படுகின்றார்கள்.. அவர்களின் முடிவை அல்லது கொள்கையை நாம் எப்படி கடைப்பிடிப்பது.

ஆகையால் மக்கள் ஆட்சி என்பது மக்களின் ஆட்சியாக வே இருக்க விரும்புகின்றேன் ஆகையால் ஆதார் மூலம் அனைத்து மக்களின் கருத்து மற்றும் ஒப்புதல் செயல் திட்டங்களுக்கு வேண்டும்..

ஒரு தேசம் சார்ந்த திட்டம் என்றால் தேசிய அளவிலும், மாநிலம் சார்ந்த திட்டம் என்றால் மாநில அளவிலும், மாவட்டம் சார்ந்த திட்டம் என்றால் மக்களின் ஆதார் ஒப்பம் வேண்டும் என்பதே நமது நோக்கம்... இதற்காக மத்திய மாநில அரசு செயல்பட வேண்டும்...

நன்றி... அதிகம் பகிருங்கள்...

பொது மக்களின் நலன் சார்ந்து நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
 

No comments:

Post a Comment