Monday, 4 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய் சான்றை பயன்படுத்துவோருக்கான தண்டனைகள்



இ.த.ச 198 -

  யாராவது ஒருவர், சட்டப்படியாக பயன் படுத்தக்கூடிய சான்று பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையேன்று அளித்து அது பொய்யானது என்று அறிந்தப்பின்னர் அதனை உண்மையானது என்று பயன்படுத்துவதும் அல்லது பயன்படுத்த முயற்சி செய்பதும் குற்றமாகும், 

  இந்தக் குற்றத்திற்கு  பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே அவர்களுக்கும் விதிக்கப்பட விதிக்கப்படவேண்டும்.



Section 198- Using as true a certificate known to be false


   Whoever corruptly uses or attempts to use any such certificate as a true certificate, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence. 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்று கொடுத்தால் அல்லது கையேழுத்திட்டால் என்ன தண்டனைகள்




இ.த.ச 197 -

        யாராவது, ஒரு பொய்யான ஒரு தகவலை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்தக்கூடிய சான்று ஆவணத்தில் அல்லது  பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையான தகவல் என பதிவோருக்கும்,  அதனை உண்மையான சாட்சியாமாகப் பயன்படுத்துவோருக்கும் பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது போலி ஆவணத்தை உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 197- Issuing or signing false certificate


   Whoever issues or signs any certificate required by law to be given or signed, or relating to any fact of which such certificate is by law admissible in evidence, knowing or believing that such certificate is false in any material point, 

    shall be punished in the same manner as if he gave false evidence.



   குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Sunday, 3 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் பொய்ச்சான்று தண்டனைகள் - 1



இ.த.ச 196 -

    யாராவது ஒருவர், வேண்டும் என்றே தெரிந்தே அடுத்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீய எண்ணத்துடன் தவறாக தான் சொல்லும் அல்லது பயன்படுத்தும் சாட்சியம் பொய்யானது அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் அதனை உண்மையான சாட்சியமாக சொல்வதும், உபயோகிப்பதும் அல்லது உபயோகிக்க முயற்சிச் செய்பவதும் குற்றமாகும் , 


  
     இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ அதே தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 196- Using evidence known to be false

   Whoever corruptly uses or attempts to use as true or genuine evidence any evidence which he knows to be false or fabricated, 

     shall be punished in the same manner as if he gave or fabricated false evidence. 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Thursday, 31 March 2016

தினம் ஓரு சட்டம் - தம்முடைய பொய் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்கப் பெற்றால்


இ.த.ச 195 -

      யாராவது தம்முடைய சாட்சியத்தியத்தின் மூலம் அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட சாட்சியத்தின் பெரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிந்தப்பின்னரும், ஒருவர் பொய் சாட்சி உருவாக்கினாலும் அல்லது பொய் சாட்சி அளித்தாலும் குற்றமாகும் ,

    அந்த நபருக்கு, அந்த நபர் எத்தகைய குற்றத்தைப்பற்றிச் சாட்சியம் அளித்தாரோ அத்தகைய குற்றத்திற்கு உரிய தண்டனையை விதிக்கப்படவேண்டும்.




Section 195- Giving or fabricating false evidence with intent to procure conviction of offence punishable with imprisonment for life or imprisonment
 


  Whoever gives or fabricates false evidence intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which 1[by the law for the time being in force in 2[India] is not capital, but punishable with 3[imprisonment for life], or imprisonment for a term of seven years or upwards, 

 shall be punished as a person convicted of that offence would be liable to be punished.

Illustration

A gives false evidence before a Court of Justice intending thereby to cause Z to be convicted of a dacoity. The punishment of dacoity is 3[imprisonment for life], or rigorous imprisonment for a term which may extend to ten years, with or without fine. A, therefore, is liable to 3[imprisonment for life] or imprisonment, with or without fine.

1. Subs. by the A. O.1948, for "by the Law of British India or England".

2. Sub. by Act 3 of 1951, sec. 3 and Sch., for "the States".

3. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
 

 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

Wednesday, 30 March 2016

தினம் ஓரு சட்டம் - மரணத் தண்டனைக்குரிய பொய்ச்சான்று உண்டாக்கியதற்கான தண்டனைகள்


இ.த.ச 194 -

      யாராவது ஒருவர், தாம் அளிக்கின்ற சாட்சியத்தின் மூலம் மற்றோருவர் மீது மரணத்தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்தும், பொய்ச்சாட்சி  அளித்தாலும், அல்லது பொய்ச்சான்றினை உருவாக்கினாலும் குற்றமாகும்.

  அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.

   அத்தகைய சாட்சியத்தின் விளையாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டித் தண்டிக்கப்பட்டு, தண்டனையும் நிறைவேறப்பட்டால், அத்தகைய சாட்சியத்தைத் தந்தவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.





Section 194- Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence
 
   Whoever gives or fabricates false evidence, intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which is capital 1[by the law for the time being in force in 2[India]] shall be punished with 3[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine;

if innocent person be thereby convicted and executed.-and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described.

1. Subs. by the A. O.1948, for "by the Law of British India or England".

2. Subs. by Act 3 of 1951, sec. 3 and sch., for "the States".

3. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life" (w.e.f. 1-1-1956).



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Tuesday, 29 March 2016

தினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண்டனைகள்



இ.த.ச 193 -

      யாராவது ஒருவர்,  நீதிமன்றத்தின் முன் கருத்துடனும் தெளிவுடனும் பொய்ச்சான்று அளிப்பவருக்கும், நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்குப் பொய்ச் சான்றினை உருவாக்குவோருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

    வேறு எவ்விதமான வகைகளில் பொய்ச் சான்று உருவாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


விளக்கம் 1-


     ஒர் சட்டப்படி அமைக்கப்பட்ட படை நீதி மன்றத்தில் நடைப்பெறும் விசாரனையை நீதிமன்ற விசாரனையாகவே கொள்ள வேண்டும்.

விளக்கம் 2-

     ஒர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னதாகச் சட்டபூர்வமாக உத்தரவிடப்பட்ட ஆய்வினை நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகக் கருதவேண்டும்.  அத்தகைய ஆய்வு ஒரு நீதிமன்றத்தில் நடைப்பெறவில்லையென்றாலும் கருத்தில் கொள்ளவேண்டும். அது ஒரு திருப்பாயத்தில் நடைப்பெற்றாலும்.




விளக்கம் 3-
  ஒர் நீதிமன்றத்தின் உத்திரவும் அங்கீகாரமும் பெற்று நடைப்பெறும் விசாரனையை, நீதிமன்ற விசாரனையின் ஒரு அங்கமாகவே கருதப்படவேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
 
உதாரணம் - A என்பவர் ஒரு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு அலுவர் முன்பு உண்மையைதான் கூறவேண்டும் என்ற கட்டாயம் இருக்க அவ்வாறே அவர் சத்தியப்பிரமானம் செய்ந்து தனக்கு தெரிந்த உண்மையான தகவலை தராமல் பொய்யான தகவலைத் தருவது குற்றமாகும். A என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய் சாட்சியம் அளித்ததாக கருதப்படும்.
 
 
Section 193- Punishment for false evidence


   Whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;

and whoever intentionally gives or fabricates false evidence in any other case, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

Explanation 1-A trial before a Court-martial; 1[* * *] is a judicial proceeding.

Explanation 2-An investigation directed by law preliminary to a proceeding before a Court of Justice, is a stage of a judicial proceeding, though that investigation may not take place before a Court of Justice.

Illustration

A, in an enquiry before a Magistrate for the purpose of ascertaining whether Z ought to be committed for trial, makes on oath a statement which he knows to be false. A this enquiry is a stage of a judicial proceeding, A has given false evidence.

Explanation 3-An investigation directed by a Court of Justice, according to law, and conducted under the authority of a Court of Justice, is a stage of a judicial proceeding, though that investigation may not take place before a Court of Justice.

Illustration

A, in any enquiry before an officer deputed by a Court of Justice to ascertain on the spot the boundaries of land, makes on oath a statement which he knows to be false. As this enquiry is a stage of a judicial proceeding. A has given false evidence.


*The words "or before a Military Court of Request" rep. by Act 13 of 1889. sec. 2 and Sch.
 
 
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்றினை உருவாக்குதல்


இ.த.ச 192 -


         யாராவது, ஒரு தவறான சூழ்நிலையை உண்மையானதாக்த் தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும் அல்லது ஒரு பொய்யான தகவலை ஒரு புத்தகத்தில் பதிப்பதும் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் பதிவதும் அல்லது எத்தகைய ஆவணத்திலும் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் அதை பதிவதும் அதனை ஒரு நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்யப்பட இருக்கும் ஒரு புத்தகத்தில் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ரெகார்டில் அல்லது ஆவணத்தில் ஒரு பொய்யான தகவலைப் பதிவு செய்யவைப்பதும், அல்லது ஒரு தவறானப் பதிவு செய்யவைப்பதும், ஒரு தவறான சூழ்நிலையை உண்மையானதாக்த் தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும். ஏனேன்றால் அந்தத் தவறான தகவலை நம்பி ஒரு பொது ஊழியரோ அல்லது ஒரு நீதிமன்றமோ உண்மைக்கு புறம்பான ஒரு கருத்தினை உருவாக்க நேரிடும். ஆகவே இந்தக் குற்றத்தை பொய்ச் சான்றினை உருவாக்குதல் என்று கூறுகிறோம்.
 
விளக்கம்
(a) A என்பவர் Z க்கு சொந்தமான ஒரு பெட்டியில் ஒரு நகையை போட்டு அவரை திருடர் என நம்பவைக்க, அவ்வாறே அந்த நகை Z பெட்டியிலிருந்து எடுக்கப்படுகின்றது அவரை திருடராக நம்பப்படுகின்றது.  A என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய்யான ஆவணங்களை உண்டாக்குன்றார்.

(b) A  என்பவர் நீதிமன்றத்தில் உண்மையான தகவல் என நம்பவைக்க தம்முடைய கடையில் உள்ள புத்தகத்தில் ஒரு தவறான தகவலை பதிய வைக்கின்றார். A
என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய்யான ஆவணங்களை உண்டாக்குன்றார் .


1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).


Section 192- Fabricating false evidence

       Whoever causes any circumstance to exist or 1[makes any false entry in any book or record or Electronic Record, or makes any document or Electronic Rercord containing a false statement], intending that such circumstance, false entry or false statement may appear in evidence in a judicial proceeding, or in a proceeding taken by law before a public servant as such, or before an arbitrator, and that such circumstance, false entry or false statement, so appearing in evidence, may cause any person who in such proceeding is to form an opinion upon the evidence, to entertain an erroneous opinion touching any point material to the result of such proceeding, is said "to fabricate false evidence".

Illustrations

(a) A puts jewels into a box belonging to Z, with the intention that they may be found in that box, and that this circumstance may cause Z to be convicted of theft. A has fabricated false evidence.

(b) A makes a false entry in his shop-book for the purpose of using it as corroborative evidence in a Court of Justice. A has fabricated false evidence.

(c) A, with the intention of causing Z to be convicted of a criminal conspiracy, writes a letter in imitation of Z's handwriting, purporting to be addressed to an accomplice in such criminal conspiracy, and puts the letter in a place which he knows that the officers of the Police are likely to search. A has fabricated false evidence.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.